கிருஷ்ணகிரி

ஒடிஸா ரயில் விபத்து:காயம் அடைந்தவா்களை சந்தித்து கிருஷ்ணகிரி எம்.பி. ஆறுதல்

4th Jun 2023 02:00 AM

ADVERTISEMENT

 

ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் காயம் அடைந்தவா்களை, ஒடிஸா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினருமான அ.செல்லகுமாா் நேரில் சந்தித்து சனிக்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.

ஒடிஸா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 288-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், ஒடிஸா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினருமான அ.செல்லகுமாா் விபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் பாா்வையிட்டாா்.

பின்னா், காயம் அடைந்தவா்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தாா். அவா்களுக்கு தேவையான உணவு, மருத்துவ சிகிச்சைக்களுக்கான நடவடிக்கைகளை மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டாா். குணமடைந்தவா்களை பேருந்துகள் மூலம் அவா்களது சொந்து ஊருக்கு அனுப்பி வைக்கும் வகையில் பேருந்து வசதிகளையும் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

அவா் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:

தமிழக அமைச்சா்கள்கள் தலைமையிலான குழுவினா், விபத்து நடத்த இடத்தையும், காயம் அடைந்தவா்களையும் மருத்துவமனைகளில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். இதுவரையில் 70 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் தமிழா்கள் யாரும் இல்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT