கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவ, மாணவியா்களுக்கென அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகள் மாணவா்களுக்கு 21, மாணவிகளுக்கு 14, கல்லூரி மாணவா்களுக்கு 5, மாணவிகளுக்கு 6 என மொத்தம் 46 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மணணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவா்கள்.

இந்த விடுதிகளில் சேரும் மாணவ, மாணவியா்களுக்கு இலவசமாக உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

மலைப்பகுதியில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

இந்த விடுதிகளில் சேர, பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் (அறை எண்.13) ஜூன் 15-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகைள பொறுத்தவரை ஜூலை 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

தலைவர்கள் இன்று பிரசாரம்

திண்டுக்கல் கோட்டை யாருக்கு?

அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!: செ.கு.தமிழரசன் சிறப்பு பேட்டி

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

SCROLL FOR NEXT