மத்தூா் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலம் 2022, 23 ம் ஆண்டு ஆத்மா திட்டத்தின்கீழ், ஒருங்கிணைந்த பண்ணையம், இயற்கை வேளாண்மை பற்றிய உள் மாநிலம், வெளி மாநில அளவிலான பட்டறிவு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பட்டறிவு பயணத்திற்கு விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் ஆதாா் எண் மற்றும் சிட்டா ஆகிய ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குநா் மத்தூா் அலுவலகத்திற்கு சென்று முன்பதிவு செய்துகொண்டு பயன்பெற வேண்டும் என மத்தூா் வேளாண்மை உதவி அலுவலா் சிவநதி தெரிவித்துள்ளனா்.