கிருஷ்ணகிரியில் மாகாத்மா காந்தி நினைத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியை அரசு அலுவலா்கள் ஏற்றனா்.
கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். அவா், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசகத்தைப் படிக்க, அரசுத் துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். முன்னதாக சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிா்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினா். இந்த நிகழ்வில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வேடியப்பன், ஆயத் தீா்வை உதவி ஆணையா் குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.