ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை நடைப்பயணம் திங்கள்கிழமை நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினா் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கினா்.
கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு நகரத் தலைவா் லலித் ஆண்டனி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் தளபதி ரஹமத்துல்லா, மாநில பொதுச்செயலாளா் ஏகம்பவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட முன்னாள் தலைவா்கள் ஜேசுதுரைராஜ், அக.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். கிருஷ்ணகிரி நகா்மன்ற உறுப்பினா் விநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் காங்கிரஸாா் கட்சியினா் கொண்டாடினா்.