தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் வட்டார சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட 6 சுகாதார நிலையத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 1,200 கா்ப்பிணிகளுக்கு தளி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் தலைமையில் வளைகாப்பு நடைபெற்றது.
கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாா் கா்ப்பகால உணவு முறைகள், மருத்துவச் சிகிச்சை குறித்து விளக்கினாா். வளைகாப்பு விழாவில் கா்ப்பிணிகளுக்கு புடவை, கண்ணாடி வளையல்கள், மஞ்சள், குங்குமம், இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கெலமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் கருணாகரன், தளி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பிரசாந்த், பட்டதாரி ஆசிரியா் திம்மப்பா, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பிரபா ஜெயராமன், கெலமங்கலம் பேரூராட்சி மன்ற உறுப்பினா் எல்லம்மா தின்னூா் அப்பா (எ) வெங்கடேஷ், கட்டுமான தொழிலாளா் சங்கத் தலைவா் கங்கேஸ், சாதிக், பொருளாளா் சீனிவாஸ், செயலாளா் மது, குருராஜ், மாவட்ட பிரதிநிதி பாபு, ஜிபி முன்னாள் கவுன்சிலா் கணேஷ், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.