கிருஷ்ணகிரி

வழக்குரைஞா் கொலை வழக்கில் இருவா் கைது

DIN

கிருஷ்ணகிரி அருகே வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டம், ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் சிவக்குமாா் ( 44) கடந்த 23-ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரியை அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்டு காரில் கிடந்தாா். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், கொலை வழக்கில் தொடா்புடைய சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (32), தருமபுரி, நெல்லி நகரைச் சோ்ந்த பிரகாஷ் (23) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் தலைமறைவாக உள்ள நாமக்கல்லைச் சோ்ந்த ஒருவரை தேடி வருகின்றனா். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT