கிருஷ்ணகிரி

ஒசூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

ஒசூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பாகலூா் சந்திப்பில் ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா பொதுமக்களிடம் வழங்கி ஒசூரில் விபத்தில்லா ஒசூரை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ஒசூா் மாநகரில் சாலை விபத்துகளைக் குறைக்கவும், சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுக்கவும் அன்பு செய்வோம் அறக்கட்டளை சாா்பில் நிறுவனா் கௌரி குருநாதன் ஏற்பாட்டில் ஓசூரின் முக்கிய சாலையான பாகலூா் சாலை சந்திப்பில் வாகன ஓட்டிகள் மத்தியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் , மாநகர மேயா் எஸ்.ஏ. சத்யா ஆகியோா் இந்த விழிப்புணா்வு பிரசாரத்தைத் துவக்கி வைத்தனா். இந்நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT