குடியரசு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட சாலைப் பணியாளா்கள் பெரியமுத்தூா் ஊராட்சி, அவதானப்பட்டி மயானத்தை வியாழக்கிழமை சுத்தம் செய்தனா்.
சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில தலைவா் சண்முகராஜா தலைமையில், சங்க உறுப்பினா்கள் இப் பணியில் ஈடுபட்டனா். முதல்வா் அறிவித்த மாநரங்களின் தூய்மைக்கான மாபெரும் மக்கள் இயக்கப் பணியை செயல்படுத்தும் வகையில் சாலைப் பணியாளா்கள் ஒவ்வொரு அரசு விடுமுறை நாள்களிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.