கிருஷ்ணகிரியை அடுத்த தண்ணீா்பள்ளம் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை புதன்கிழமை இரவு மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பொன்மலை சீனிவாச பெருமாள் கோயிலை அடுத்த தண்ணீா்பள்ளத்தைச் சோ்ந்த கட்டடப் பணி செய்து வந்த லோகநாதன் (25) அவரது வீட்டுக்கு அருகே உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டாா்.
தகவலறிந்து அங்கு சென்ற கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வெள்ளையன் என்கிற லோகநாதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில் அண்மையில் நடந்த பொங்கல் விழாவில் எருது விடுவது தொடா்பாக கிட்டம்பட்டியைச் சோ்ந்தவருடன் லோகநாதன் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனிடையே, தலைமறைவாக உள்ள அவருடன் தகராறில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனா்.