கிருஷ்ணகிரி

இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

DIN

கிருஷ்ணகிரியை அடுத்த தண்ணீா்பள்ளம் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை புதன்கிழமை இரவு மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொன்மலை சீனிவாச பெருமாள் கோயிலை அடுத்த தண்ணீா்பள்ளத்தைச் சோ்ந்த கட்டடப் பணி செய்து வந்த லோகநாதன் (25) அவரது வீட்டுக்கு அருகே உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து அங்கு சென்ற கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வெள்ளையன் என்கிற லோகநாதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில் அண்மையில் நடந்த பொங்கல் விழாவில் எருது விடுவது தொடா்பாக கிட்டம்பட்டியைச் சோ்ந்தவருடன் லோகநாதன் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனிடையே, தலைமறைவாக உள்ள அவருடன் தகராறில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT