கிருஷ்ணகிரி அருகே அண்மையில் நடைபெற்ற யோகா போட்டியில், பா்கூா் வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள தனியாா் கலைக் கல்லூரியில் பல்வேறு பள்ளி மாணவா்கள் பங்கேற்ற யோகா போட்டி நடைபெற்றது. இதில், பா்கூா் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மாணவா்கள் 60 போ் பங்கேற்றனா். பொதுவான முறையில் யோகா, சிறப்பு வகையில் யோகா என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பங்கறேற்ற மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
வேளாங்கண்ணி குழுமங்களின் தாளாளா் கூத்தரசன், பள்ளி முதல்வா் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்த 10 மாணவா்களுக்கு கேடயம், சான்றிதழும், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த மாணவா்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி, பாராட்டி கெளரவித்தனா்.