கிருஷ்ணகிரி

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

DIN

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்த நாளான மாா்ச் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிா்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூா், பகுதி செயலாளா்கள், நிா்வாகிகள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வாா்டு செயலாளா்கள், கிளை செயலாளா்கள் என அனைவரும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அதேபோல மாா்ச் 1 ஆம் தேதி அந்தந்தப் பகுதிகளில் திமுக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT