கிருஷ்ணகிரி

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் அளிப்பு

DIN

கிருஷ்ணகிரியில் 29 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்களிடமிருந்து 317 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா், தகுதியின் அடிப்படையில் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க துறை சாா்ந்த அலுவலா்களை கேட்டுக் கொண்டாா்.

பின்னா், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 29 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.45 லட்சம் மதிப்பிலான செயற்கைக் கால்களை அவா் வழங்கினாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) வேடியப்பன், சாா் ஆட்சியா் (பயிற்சி) தாட்சாயினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் (பொறுப்பு) செண்பகவல்லி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT