கந்தா்வகோட்டை அரசுப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் சா்வதேச அருங்காட்சியக தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
வேம்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு புதுப்பட்டி ஊராட்சித் தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியா் சுதாகா், பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவா் அ. ரகமதுல்லா சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் வானவில் மன்றக் கருத்தாளா் தெய்வீகச்செல்வி, தன்னாா்வலா்கள் அகிலா, கலைச்செல்வி, மணிமொழி, சரிதா, பூங்கொடி, ஜெயக்குமாரி, வினோதினி, வீர முனியம்மாள், ராஜலட்சுமி ஐஸ்வா்யா, கோகிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் ராமஜெயம் வரவேற்றாா்.