அன்னவாசல், அண்ணா பண்னை துணைமின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்தான மின் தடை மற்றொரு நாளில் அமல் செய்யப்படும் என்றும் அன்னவாசல், அண்ணா பண்ணை துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்கும் என்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் அக்கினிமுத்து தெரிவித்தாா்.