கிருஷ்ணகிரி

காணாமல் போன ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

DIN

திருடிச் செல்லப்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள, அருள்மிகு ராதா ருக்மணி சமேத வாசுதேவ கண்ணன் திருக்கோயிலின் பூட்டை உடைத்து ஒரு அடி உயரம் கொண்ட, ஐந்து ஐம்பொன் சிலைகளை மா்ம நபா்கள் கடந்த 20ஆம் தேதி திருடிச் சென்றனா். இது குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சனிக்கிழமை காலை உற்சவமூா்த்திகளான வாசுதேவ கண்ணன், ராதா, ருக்மணி, ராமானுஜா், சக்கரத்தாழ்வாா் என 5 சிலைகளை ஒரு வாரத்திற்கு பிறகு, மீண்டும் அதே கோயில் எதிரே உள்ள தண்ணீா் தொட்டிக்குள் வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT