ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தலைமை வகித்தாா். தருமபுரி மாவட்ட மருத்துவ சேவைப் பிரிவு துணை இயக்குநா் (தொழுநோய்) மருத்துவா் புவனேஸ்வரி மாணவ, மாணவியருக்கு தொழுநோய் பற்றிய விழிப்புணா்வு கருத்துரைகளை வழங்கினாா். இதில், 600 மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் பஞ்சமூா்த்தி, சதீஷ்குமாா், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்நாதன் ஆகியோா் செய்திருந்தனா். கணித விரிவுரையாளா் தியாகராஜன் நன்றி கூறினாா்.