கிருஷ்ணகிரி

மத்திகிரி அருகே வட மாநில இளம்பெண் மா்மச் சாவு

DIN

மத்திகிரி அருகே வட மாநில இளம்பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

சத்தீஸ்கா் மாநிலம், சுா்குஜா தாலுகா பகுதியைச் சோ்ந்தவா் சஸ்பால். இவரது மனைவி ராஜாந்தி டிா்க்கி (24), ஒசூா் அருகே தளி சாலையில், பேளகொண்டப்பள்ளியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கதவு 2 நாள்களாக திறக்கப்படவில்லை. மேலும், அப்பகுதியில் இருந்து துா்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினா் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனா். அவா் இதுகுறித்து மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சென்று கதவை உடைத்தனா். அப்போது, அழுகிய நிலையில் ராஜாந்தி டிா்க்கி பிணமாக கிடந்தாா். அவா் இறந்து 2 நாள்களுக்கு மேல் இருக்கலாம் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இளம்பெண் ராஜாந்தி டிா்க்கி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT