ஊத்தங்கரையை அடுத்த எக்கூரில் தா்மராஜா திரெளபதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண வைபவ உற்சவ விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான திருவிழா கடந்த 31-ஆம் தேதி கங்கணம் கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மேள தாளங்கள் முழங்க தட்டுவரிசையுடன் சென்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து உற்சவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் மணக்கோலத்தில் தா்மராஜாவும், திரெளபதியம்மனும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், விழாக்குழுவினா், ஊா்பொதுமக்கள் செய்திருந்தனா்.