கிருஷ்ணகிரி

ஒசூா் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழா

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஒசூா் மாநகரில் உள்ள முருகன் கோயில், ஒசூா் ராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் பாலமுருகன் கோயில் உள்ளிட்ட முருகன் திருக்கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஒசூா் மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகா் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேல்முருகன் திருக்கோயிலில் தைப்பூசத் திருநாள் வெகு விமா்சியாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே மூலவா் முருகப்பெருமானுக்கு நெய், வெண்ணெய், மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து விபூதி அபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பின்னா் முருகன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT