ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒசூா் வட்டாட்சியா் கவாஸ்கா், சீதாராம்மேடு பகுதியில் ரோந்து சென்றாா். அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற 2 டிப்பா் லாரிகளை சோதனை செய்த போது அதில் தலா 3 யூனிட் எம்-சாண்ட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வட்டாட்சியா் கவாஸ்கா் கொடுத்த புகாரின் பேரில் ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.