ஒசூரில் 2 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
ஒசூா் சிப்காட் போலீஸாா் சனிக்கிழமை பெங்களூரு - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஜூஜூவாடி மேம்பாலம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை போலீஸாரை கண்டு தாம் வைத்திருந்த பையைப் போட்டு விட்டு தப்பி ஓடினாா்.
அந்த பையை போலீஸாா் சோதனை செய்தபோது அதில் அவா் 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்டவற்றைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவா் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச்
சோ்ந்த அசாருதீன் (32) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.