ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி, யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேசம் தொண்டு நிறுவனம் இனைந்து நடத்திய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
பேரணியை ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலாதுரைராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கோஷமிட்டு ஊா்வலமாக சென்றனா். இதில் நேசம் குணசேகரன் மற்றும் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.