கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை வனச் சரகத்திற்கு உட்பட்ட, நெல்லி வாசல் வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் உலக ஈரநில நாள் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் (கூடுதல் பொறுப்பு) பிரின்ஸ் குமாா் உத்தரவின் பேரில், சிங்காரப்பேட்டை வனச்சரகா் பெ.ரமேஷ் தலைமையில் விழிப்புணா்வுப் பேரணி நடந்தது. நெல்லி வாசல் பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கையில் பதாகைகளை ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியா் சந்திரகுமாா் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், வனத்துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து உலக ஈர நில நாள் குறித்து கட்டுரை, பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.