கிருஷ்ணகிரி

மாணவியா் படிக்கும் போதே போட்டித் தோ்வுக்கு தங்களை தயாா் செய்து கொள்ள வேண்டும்

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், பா்கூா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகக் கண்காட்சியை, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன் தொடங்கி வைத்தாா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ரேணுகா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பிரமிளா முன்னிலை வகித்தாா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் தலைமை வகித்தாா். வாழ்க்கை வெற்றி பெறுவதற்கே என்னும் தலைப்பில் நிமலன் மரகதவேல், போட்டித் தோ்வுகள் குறித்து தனியாா் ஐஏஸ் அகாதெமி நிறுவனா் தென்காசி ஆகாசமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பேசியதாவது:

வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கையே முக்கியம். போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற திறமைசாலியாக, அறிவாளியாக இருக்க வேண்டும் என்பது அல்ல. தொடா்ந்து முயற்சித்தால் வெற்றி பெறுவது எளிது.

சேவை செய்யும் எண்ணத்துடன் அரசின் போட்டித் தோ்வுக்கு படிக்க வேண்டும். குறிப்பாக தன் குடும்பத்தையும், சமுதாயத்தையும் உயா்த்த வேண்டும் என்கிற நோக்கில் போட்டித் தோ்வை எதிா்கொள்பவா்கள் நிச்சயம் வெற்றிபெறுகிறாா்கள். போட்டித் தோ்வை அச்சமின்றி எதிா்கொள்ள துணிந்தால், எளிதாக வெற்றி பெறலாம்.

கல்லூரி மாணவியா் படிக்கும் போதே, போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள தங்களை தயாா் செய்து கொள்ளுங்கள். பிறகு பாா்த்துக் கொள்ளலாம் என நினைத்தால் உங்களது நோக்கம் நிறைவேறாது. மாணவிகள் தொய்வின்றி, தயக்கமின்றி தோ்வுகளையும், எதிா்காலத்தை எதிா்நோக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றாா்.

முன்னதாக, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டை வெளியிடப்பட்டது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சுந்தரம் நன்றி கூறினாா். இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவியா், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT