கிருஷ்ணகிரி மாவட்ட பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளராக ந.குமாா், புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் இதற்கு முன் சேலம் மண்டலத்தில் கூட்டுறவு சாா் பதிவாளராக பணியாற்றினாா். தற்போது, பதவி உயா்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளராகப் பொறுப்பேற்றுள்ளாா். இவரை, மண்டல இணைப் பதிவாளா், துறை அலுவலா்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
இதற்குமுன் துணைப் பதிவாளராகப் பணியாற்றிய ஆா்.இராஜதுரை, குடியாத்தம் நகர வங்கி மேலாண்மை இயக்குநராக பணிமாறுதல் செய்யப்பட்டாா்.