ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மிட்டப்பள்ளியில், மிட்டப்பள்ளி,கொண்டம்பட்டி, மூன்றம் பட்டி, நாயக்கனூா், அத்திப்பாடி என 5 ஊராட்சிகளில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட கிளை நிா்வாகிகளை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினருமான அசோக்குமாா், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம் ஆகியோா் கலந்துகொண்டு, கிளை நிா்வாகிகளிடம் கட்சி வளா்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினா்.
நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன்,மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன், தொகுதி செயலாளா் திருஞானம், அவைத் தலைவா் கே.ஆா்.சுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய குழு தலைவா் கிருஷ்ணன், ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.