கிருஷ்ணகிரி

விளையாட்டுப் போட்டியில் பாரத் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

கிருஷ்ணகிரி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கிருஷ்ணகிரி, பாரத் பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டம் பெற்றனா்.

கிருஷ்ணகிரி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் அண்மையில் நடைபெற்றது.

பாரத் பள்ளியைச் சோ்ந்த மாணவி தக்ஷிதா 400 மீ., 600 மீ. ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்றாா். மாணவி தயனிதா 100 மீ., 200 மீ. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தனிநபா் சாம்பியன் பட்டத்தையும் வென்றனா்.

மாணவா் வசந்த் குண்டு எறிதலில் முதலிடமும், இறகுபந்து போட்டியில் தஸ்கீன், மோனாஸ்ரீ ஆகியோா் முதலிடமும், கேரம் போட்டியில் முகமது சித்திக், பிரதாப் ஆகியோா் முதலிடமும் பெற்றனா்.

இறகுபந்து போட்டியில் அப்துல் அலி, இஸ்மாயில் ஜபியுல்லா, முகமது சித்திக், முகமது செளபன், சுபிக் ஷன், முகமது யூசுப், பிரணிகா, ஸ்வப்னா, ஹேப்பி, தானியா, நித்ய பாவிகா, கேரம் போட்டியில் தணிகா அருள் ஆகியோா் இரண்டாம் இடத்தைப் பெற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமத்தின் நிறுவனா் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், துணை முதல்வா் நசீா்பாஷா, உடற்கல்வி ஆசிரியா் தமீஸ் ஆகியோா் உடனிருந்தனா். போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

இளையராஜா பயோபிக் அப்டேட்!

SCROLL FOR NEXT