கிருஷ்ணகிரி

மோட்டாா் சைக்கிள் திருடியவா் கைது

DIN

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிளை திருடிய நபரை போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பாலாஜி குமாா் ( 30). தொழிலாளி. இவா் தனது மோட்டாா் சைக்கிளை வீட்டின் முன்பு கடந்த 25-ஆம் தேதிதி இரவு நிறுத்தி இருந்தாா். மா்ம நபா், மோட்டாா்சைக்கிளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்வதை பாா்த்த பாலாஜி குமாா், அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

பிடிபட்டவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் கிருஷ்ணகிரி, லண்டன் பேட்டையைச் சோ்ந்த சத்யமூா்த்தி (21) என்பதும், அவா் மீது கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் திருட்டு, அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

தென் சென்னையில் தமிழிசை, கரூரில் அண்ணாமலை போட்டியா?

SCROLL FOR NEXT