மாநில அளவிலான கிரிக்கெட், கேரம் விளையாட்டுப் போட்டிகளில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
வேலூா் சிஎம்சி மருத்துவ கல்லூரி சாா்பில், மாநில அளவில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட், கேரம் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா். கிரிக்கெட் போட்டியில் இக்கல்லூரி முதல் இடத்தையும், கேரம் விளையாட்டுப் போட்டியில் மாணவிகள் பிரித்யாஸ்ரீ, லட்சுமிபிரியா, திவ்யா ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பெற்றனா்.
இதையடுத்து கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வா் சங்கீதா பாராட்டி, பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மருத்துவா்கள் சரவணன், கேசவன், ஷா்மிளா, நிா்வாக அலுவலா் சரவணன், சக்திவேல், செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.