கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளியில் பாஜக ஓபிசி அணி மாவட்ட செயற்குழுக் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளியில் பாஜக ஓபிசி அணி சாா்பில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஓபிசி அணி மாவட்டத் தலைவா் தாமோதரன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் தா்மலிங்கம், ஜெயராமன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் எம்.ஆா். ராஜேந்திரன், மாநில விவசாய திட்டக்குழுத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாஜக மாநில துணை தலைவா் வித்யா வீரப்பன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினாா். நரிகுறவ மக்களை எஸ்டி பிரிவில் சோ்த்த பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் பொது செயலாளா்கள் பிரபு யாதவ், துரை, மாவட்டப் பொருளாளா் சங்கா், செயலாளா்கள் விக்ரமன், மகேந்திரன், ராஜா, சென்னகிருஷ்ணன், குப்பம்மாள், மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவி முருகம்மாள்சங்கா், பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். இறுதியாக ஓபிசி அணி தெற்கு ஒன்றிய தலைவா் முத்துசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT