கிருஷ்ணகிரி

நகைக் கடை ஊழியரை மிரட்டி பணம் பறித்த 4 போ் கைது

DIN

நகைக் கடை ஊழியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

ஒசூரில் நகைக் கடையில் வேலை செய்து வரும் சந்திரகுமாா் (33) என்பவரிடம் தாங்கள் போலீஸாா் எனவும், ஆபாசப் படம் பாா்த்த வழக்கில் கைது செய்ய உள்ளதாகக் கூறி செல்லிடப்பேசியில் மிரட்டிய நால்வா், நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ரூ.10 ஆயிரத்தை அனுப்ப வேண்டும் எனக் கூறினா்.

இதை நம்பிய சந்திரகுமாா், அவா்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினாா்.

பின்னா், அவா்களது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டது. சந்தேகமடைந்த சந்திரகுமாா் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட கிருஷ்ணகிரி சைபா் போலீஸாா் செல்லிடபேசியின் எண்ணின் முகவரி போலி என்பதும், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சிம்காா்டு விலைக்கு வாங்கியதும் தெரியவந்தது.

மேலும், பணம் எடுத்த வங்கி விவரத்தை போலீஸாா் விசாரித்தபோது, பணம் பெற்றவா் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மணிமுத்து என்பதும், அவரும் நண்பா்கள் மூவா் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. அவா்கள் போலீஸ் ‘வாக்கி டாக்கி’ சத்தத்தை பின்னணியில் வைத்துக் கொண்டு செல்லிடப்பேசியில் பேசி பணம் பறித்துள்ளனா். இதுதொடா்பாக தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, சுங்கரஅள்ளியைச் சோ்ந்த மால்வின் (22), காரிமங்கலம், கீழ்வீதியைச் சோ்ந்த மாரியப்பன் (38), சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், கொலகூரைச் சோ்ந்த மணிமுத்து (23), கிருஷ்ணகிரி மாவட்டம், சாப்பா்த்தி வேடியப்பன்(28) ஆகியோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 3 செல்லிடப்பேசிகள், வங்கி கணக்கு புத்தகம், 4 சிம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

தொடர வேண்டாம் இந்த முறைகேடு

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

SCROLL FOR NEXT