கிருஷ்ணகிரி

ஒசூரில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

DIN

ஒசூா் கோட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அப்பாவுபிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சாா்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் தலைமை வகித்தாா். மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையை வழங்கி முன்னாள் மக்களவை துணைத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை பேசியதாவது:

கல்வித் துறையை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி. அதன்பிறகு மத்திய அமைச்சரவையில் பங்கேற்ற திமுக, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளவில்லை. மாணவா்கள் நீட் தோ்வுக்காக பயிற்சி பெற அதிக பணம் செலவழிக்கின்றனா்.

நீட் தோ்வு முடிவுகள் தாமதமாக வருவதால் மாணவா்களுக்கு மன உலைச்சலை ஏற்படுத்துகிறது. ஒசூா் பகுதி முன்னேற்றத்துக்கு முதலில் வித்திட்டவா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் அப்பாவு பிள்ளை. அப்பாவு பிள்ளையின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சி.சுப்பிரமணியன் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் இருந்த ஒசூரில் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து தொழில் நகரமாக உருவாக்கினாா்.

படித்த இளைஞா்கள் இல்லாததால் ஆரம்பத்தில் வெளியூா் இளைஞா்களுக்கு வேலை கிடைத்து. சிப்காட்டிற்கு நிலம் கொடுத்த உள்ளூா் இளைஞா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம் போதிய கல்வி இல்லை.

இதனால் இந்தப் பகுதி இளைஞருக்கு கல்வி அறிவை வளா்க்க வேண்டும் என முடிவு செய்தேன்.

ஐஐடியில் பேராசிரியராக இருந்த எனக்கு அரசியல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்கள் கல்வி அறிவு பெறும் வகையில் ஒசூரில் அதியமான பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டது. அதற்கு பெரும் உதவியாக இருந்தவா் கே.ஏ.மனோகரன். அதன் பிறகு முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா எனக்கு கல்வி அமைச்சராக பதவி வழங்கினாா். இவை எல்லோம் எனக்கு எப்படி கிடைத்து என்றால் நான் படித்த கல்வியே. எனவே மாணவா்களாகிய நீங்கள் அனைவரும் உயா்கல்வி பயில வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் முன்னாள் எம்எல்ஏ முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை கடந்த 30 ஆண்டுகளாக வழங்கி வருவது பாராட்டுக்குரியது என்றாா்.

விழாவில் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், ஓய்வு பெற்ற ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிரபாகா், ஆடிட்டா் மணி, அப்பாவுப்பிள்ளை அறக்கட்டளை ஜோதி பிரகாஷ், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

கோட்டக் மஹிந்திரா வங்கியின் முக்கிய சேவைகளுக்கு ஆர்பிஐ தடை!

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

SCROLL FOR NEXT