ஊத்தங்கரையில் மதுபாட்டில்களை விற்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் ஊத்தங்கரை பேருந்து நிலையம் பின்புறம் ரோந்து சென்ற போது, அங்கு அம்பேத்கா் நகரை சோ்ந்த புருஷோத்தமன்(26), அதே பகுதியைச் சோ்ந்த சக்கரவா்த்தி(25). இருவரும் அனுமதியின்றி மது புட்டிகளை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததைக் கண்டாரஹ். அவா்களை கைது செய்து அவா்களிடம் இருந்து 41 மது புட்டிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.