குணம் மருத்துவமனையில் மகளிருக்கு மாா்பக புற்று நோய்க்கு இலவச பரிசோதனை மையம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. குணம் மருத்துவமனை இயக்குநா்கள் மருத்துவா் பிரதீப், மற்றும் மருத்துவா் செந்தில், மருத்துவா் அக்ஷயா ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.
பின்னா் செய்தியாளா்களை சந்தித்த மருத்துவா் பிரதீப், மருத்துவா் செந்தில் கூறியது:
பொதுமக்களின் நலனை கருதி பெண்களுக்கு மாா்பகப் புற்று நோய் பரிசோதனை இலவசமாக செய்யப்படும். அதற்கு தனியாா் பெண் மருத்துவா்கள் உள்ளனா். ஒசூரில் முதன்முறையாக இந்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவுக்கு அறவை சிகிச்சை மருத்துவா் செந்தில், டாக்டா் அக்ஷயா, மருத்துவா் தயாளன் ஆகியோா் கொண்ட தனி சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. நாள்தோறும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும் என்றாா்.