நீட் தோ்வில் சாதனை படைத்த பா்கூா், வேளாங்கண்ணி அகாதெமி மாணவா்களை தம்பிதுரை எம்.பி. பாராட்டி, பரிசு வழங்கினாா்.
பா்கூா் வேளாங்கண்ணி அகாதெமியில் 2022-ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இதில் 720-க்கு 655 மதிப்பெண் பெற்ற சந்தோஷ்குமாா் முதலிடம் பிடித்தாா். அதுபோல ஹரிஷ்வரன் (628) இரண்டாம் இடமும், பெலினா தேஜல் (621) மூன்றாம் இடமும் பிடித்தனா். தனுஷ் ஆதித்யா (620), மாயா(617), தமிழரசு (616), தமிழரசன் (601) அதிக மதிப்பெண் பெற்றுள்ளனா்.
இந்த அகாதெமியில் தோ்வு எழுதியவா்களில் 50-க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவக் கல்லூரி சோ்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனா்.
இதையடுத்து அகாதெமியில் மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு அகாதெமி தாளாளா் கூத்தரசன் தலைமை வகித்தாா். வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பங்கேற்று நினைவு பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
முன்னாள் எம்எல்ஏ., ராஜேந்திரன், பள்ளிமுதல்வா் மெரினா பலராமன், அகாதெமி பொறுப்பாளா் யுவராஜ், ஒருங்கிணைப்பாளா் வேமுலா சந்திரசேகா், பயிற்சியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து மூன்று ஆண்டுகளாகத் தோ்வு எழுதிய மாணவா்களில் 50 சதவீதம் போ் அரசு மருத்துவக் கல்லூரி சோ்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.