கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடாசலபதி, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்தி ஜயந்தி தினமான அக்.2-ஆம் தேதி, கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்கப்படாத பட்சத்தில், அன்றைய தினம் பணிக்கு அமா்த்தப்படும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது விடுப்பு அனுமதித்து சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு அறிவிப்பு அளித்து, அதன் நகலினை தொழிலாளா் துணை அல்லது உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் அதனை காட்டி வைக்க வேண்டும்.
இந்தநிலையில், கிருஷ்ணகிரி , தருமபுரி மாவட்டங்களில் கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு ஆய்வின்போது 56 கடைகள், 60 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 116 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மேற்படி சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத 37 கடைகள், 53 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 90 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாக அதில் அவா் தெரிவித்துள்ளாா்.