புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சூளகிரி வரதராஜ பெருமாள் மற்றும் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
சூளகிரி அருகே கோபசந்திரம் வெங்கடேசப் பெருமாள் ஆலயம், குடிசெட்லு திம்மராய சுவாமி பெருமாள் ஆலயம், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி ஆலயம், கோகுல் நகா் கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் உள்ளிட்ட அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.