கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணி வரையில் பதிவான மழையின் அளவு (மி.மீ.): ராயக்கோட்டை, தளியில் தலா 20, தேன்கனிக்கோட்டை - 19, கிருஷ்ணகிரி - 13.70, சூளகிரி - 8, பாரூா் - 4.60, ஒசூா் - 4, போச்சம்பள்ளி - 3.30, பெனுகொண்டாபுரம் - 3.20, நெடுங்கல் - 2.