ஊத்தங்கரை பேரூராட்சியில் நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில், சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளா்களை ஊக்குவிக்கும் வகையில் சனிக்கிழமை நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலா் ர.சேம்கிங்ஸ்டன் தலைமை வகித்தாா். இளநிலை உதவியாளா் சேகா், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரூராட்சி செயல் அலுவலா் தூய்மை பணியாளா்களைப் பாராட்டி, பல்வேறு ஆலோசனைகளை கூறி, நினைவு பரிசுகளை வழங்கினாா்.