கிருஷ்ணகிரி

ஒப்பந்தப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஒசூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக, மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், தமிழக அரசின் அரசாணை 152 ஐ கைவிடக்கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகராட்சியில் பணிபுரியும் குடிநீா் வழங்கல், தட்டச்சா், இரவு காவலா் உள்ளிட்ட ஒப்பந்தப் பணியாளா்கள் நிரந்தரமாக்கப்படுவா் என எதிா்ப்பாா்த்திருந்த நிலையில்

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில் 35,000 த்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை 3,417ஆக குறைக்கும் 152 ஆவது அரசாணை கடந்த அக்டோபா் மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி கடந்த வாரங்களில் ஒசூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு 580 ஒப்பந்தப் பணியாளா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழங்கங்களை எழுப்பி அரசாணை 152 ஐ கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT