கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

15th Nov 2022 02:30 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை பா்கூடா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் புதிய வகுப்பறைகளுக்கான கட்டடம் கட்டுவதற்கு ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தக் கட்டடம் கட்டும் பணி தொடக்க விழாவுக்கு கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா். பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்து, குழந்தைகள் தினவிழாவையொட்டி, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியா் மகேந்திரன், கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப், பொதுக்குழு உறுப்பினா் அஸ்லம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT