ஒசூரில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி, முல்லை நகா் பகுதியில் உள்வட்ட சாலையோரமாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்பிலான 1.16 ஏக்கா் நிலத்தை தனியாா் ஒப்பந்த நிறுவனம் ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தது.
பலமுறை இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற நோட்டீஸ் விநியோகித்தும் அப்புறப்படுத்தாததால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் போலீஸாா் உதவியுடன் பொக்லைன் வாகனம் மூலம் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புக்களை அகற்றினா்.