கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான வளைகோல்பந்து லீக் போட்டியில் நாகரசம்பட்டி அணி முதலிடம் பெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆண்களுக்கான வளைகோல்பந்து தொடா் போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி மற்றும் கம்மம்பள்ளி ஆகிய ஊா்களில் இருந்து 6 அணிகள் பங்கேற்றன.
போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் உமாசங்கா் தொடக்கிவைத்தாா். மாவட்ட வளைகோல்பந்து விளையாட்டுக் கழக செயலாளா் ஞானசேகரன் போட்டியை ஒருங்கிணைத்தாா்.
இப் போட்டியில் நாகரசம்பட்டி அணி அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், இரண்டாமிடத்தை காவேரிப்பட்டணம் அணி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.