கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ரூ. 9.50 லட்சத்தில் சுகாதார வளாகம் புனரமைப்பு

12th May 2022 04:13 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பில், புனரமைக்கப்பட்ட சுகாதார வளாகத்தை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், மக்கள் பயன்பாட்டிற்கு புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கிருஷ்ணகிரி நகராட்சி வாா்டு எண் 23-இல் உள்ள கணபதி நகரில் கடந்த 2004-இல் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த சுகாதார வளாகத்தை புனரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இப் பகுதி மக்கள், நகா்மன்றத் தலைவரைக் கேட்டுக் கொண்டனா்.

இதையடுத்து, ரூ. 9.50 லட்சம் மதிப்பில் இந்த சுகாதார வளாகம் புனரமைக்கப்பட்டது. இதில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே மொத்தம் 19 குளியல் அறைகள், கழிப்பறைகள், துணி துவைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வளாகத்தைப் பராமரிக்க பணியாளா் நியமிக்கப்பட உள்ளதாக நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா். இந்த நிகழ்வில் நகா்மன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT