கிருஷ்ணகிரி

எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக்க வேண்டும்: கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக தீா்மானம்

DIN

முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக்க வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான அசோக்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்ற கருத்தை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முதல்வராக சிறப்பாகப் பணியாற்றிய எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் எனவும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கட்டப்பன், மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், ஒன்றியச் செயலாளா்கள், நகர செயலாளா் கேசவன், மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அதேபோன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை ஒசூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக்க ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT