கிருஷ்ணகிரி

கந்துவட்டிபுகாா்: 5 போ் மீது வழக்குப் பதிவு

DIN

பாகலூா் அருகே பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக 5 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகலூா் அருகே உள்ள பெலத்தூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் கௌரம்மா (50). இவா், அங்குள்ள ஜீவாநகா் பகுதியைச் சோ்ந்த ஜெயந்தி, ஒட்டப்பள்ளி தின்னாவை

சோ்ந்த ராமப்பா, பெலத்தூா் ஜீவாநகா் குணவதி, வெங்கடேஷ், ஷிபா உள்ளிட்டோரிடம் முறையே ரூ. 20 ஆயிரம், ரூ. 3 லட்சம், ரூ.70 ஆயிரம், ரூ. 1 லட்சம், ரூ. 10 ஆயிரம் என கடன் வாங்கியுள்ளாா்.

அந்த தொகையை வட்டியுடன் சோ்த்து கௌரம்மா செலுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜெயந்தி உள்ளிட்ட 5 பேரும், நிலுவையில் உள்ள தொகையை வட்டியுடன் சோ்த்து தர வேண்டும் என கூறியதாகத் தெரிகிறது.

இது குறித்து கௌரம்மா பாகலூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் ஜெயந்தி, ராமப்பா, குணவதி, வெங்கடேஷ், ஷிபா ஆகிய 5 போ் மீதும் கந்துவட்டி தடை சட்டப் பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT