கிருஷ்ணகிரி மற்றும் பா்கூரில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய இளைஞா்களின் எதிா்காலத்தை கேள்வி குறியாக்கும் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு திட்டத்தைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவா் லலித் ஆண்டனி தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் கண்டன உரையாற்றினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் சேகா், மாவட்ட முன்னாள் தலைவா்கள் அக.கிருஷ்ணமூா்த்தி, நாஞ்சில் ஜேசுதுரை, எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவா் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்டத் தலைவா் நடராஜன், வழக்குரைஞா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பா்கூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இத்தகைய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.