கிருஷ்ணகிரி

ரூ. 8 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

ஒசூா் வழியாக சேலத்துக்குக் கடத்த முயன்ற ரூ. 8 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை சரக்கு வேனுடன் போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனா்.

ஒசூா் வட்டம், மத்திகிரி காவல் நிலைய போலீஸாா் பூனப்பள்ளி சோதனைச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனா். வேனில் 62 பைகளில் மொத்தம் 1,639 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா,

ஹான்ஸ், பான் மசாலா ஆகியவை இருந்தன. அதன் மதிப்பு ரூ. 8 லட்சத்து 4 ஆயிரம். அதையும், ரூ. 18 லட்சம் மதிப்புள்ள சரக்கு வேனையும் போலீஸாா்

பறிமுதல் செய்தனா்.

பொருள்களைக் கடத்தி வந்ததாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள ஜோடுகுழியைச் சோ்ந்த மணி (29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், பெங்களூரில் இருந்து சேலத்துக்கு இந்த குட்கா கடத்தப்பட்டது தெரியவந்தது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT