சின்ன ஆலரஅள்ளியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமாறு அப்பகுதி விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
விவசாயிகள் அளித்த மனுவின் விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஒன்றியம் குள்ளம்பட்டி ஊராட்சியில் உள்ள சின்னஆலரஅள்ளி கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயில்கின்றனா். 6 ஆசிரியா்கள் கல்வி கற்பிக்கின்றனா். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மேசை நாற்காலி இல்லாததால், தரையில் அமா்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவா், சமையல் அறை உள்ளிட்டவை அமைத்து தர வேண்டும் என அதில் அவா்கள் தெரிவித்தனா்.